உத்திரபிரதேதசத்தில் உயிரிழந்த குழந்தையை புதைக்க பள்ளம் தோண்டியபோது உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பரேலி யைச் சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோஹி. இவரது மனைவி வைஷாலி, பரேலியில் சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருகிறார். 7 மாத கர்ப்பமாக இருந்த வைஷாலிக்கு பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே அந்தக் குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து இறந்த குழந்தையை புதைக்க மயானத்தில் குழி தோண்டப்பட்டது. அப்போது ஒரு பெரிய அளவிலான பானை இருந்தது. அதில் ஒரு பெண் குழந்தை மூச்சு விட போராடிக்கொண்டிருந்தது. இதையடுத்து அந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சிரோஹி அனுமதித்தார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.